Monday, August 10, 2009

ஒற்றை மீன்


சுழன்று சுழன்று ,உழன்று உழன்று ,
வெளியேற வகையின்றி ,
சுவாச மூச்சு தவிக்க ,
கண்ணெதிரே தோன்றும்
விந்தைவெளி மயக்க ,
கால இடைவெளியில் வந்து விழும்
சிறு துகள்களில் உயிர் பிழைக்க......
பளபளக்கும் பளிங்கு சூழலும்........
வளமேதுமில்லா செயற்கை உயிர்களும் ,
வாழுமிடம் என்றாகி......
சேர்ந்திருந்தோர் கண்ணெதிரே
கனவாய் கலைந்தது கண்டும் .....
சுழன்று சுழன்று ,உழன்று உழன்று ,
வெளியேற வகையின்றி ,
என் வீட்டு மீன்தொட்டியில்
ஒற்றைமீன்
என் மனம் போல.