Sunday, November 25, 2007

எதை எழுத?

கவிதை என நினைத்தால்
கண்முன்னே உன் முகம்!
கற்பனையில் உன் நினைவு!
காலமது மாற்ற இயலா
காதலும் இது தானோ!!

கவிதையென எதை எழுத?
கண்ணுடன் கண் நோக்கிய
கணப்பொழுது வேளையையா?
கணப்பொழுது நொடியில் மாறி
கருத்தில் யுகமாய் மலர்ந்ததையா?

கண்ணீரைக் கண்டு பதறி, துடைக்க
கரங்கள் வேகமாய் நீண்டதையா?
காலமெலாம் துணைஇருப்பேனென
கைபற்றிக் காதலுடன் உரைத்ததையா?

கண்பட்டு விடும் போல் நாளிரவு
காவலாய் அருகில் நின்றதையா??
கவிதையென வாழ்வதனை
காரிகைக்குத் தரும் நேரம்
கால நேரம் பாராமல்
காலன் வந்து கவர்ந்த்தையா?

கனவும் நினைவுமாய் ஆனதையா??
கண் மூடிக் உனைச் சேர
காத்துக் கலங்கி நிற்பதையா?

கவிதையே நீயாய்
கருத்தினில் ஆனபின்பு
கவிதை யென எதை எழுத?
காத்திருக்கிறேன் நான்

Monday, November 12, 2007

புரிதல்

புரிதல்,
புரிந்துகொள்ளுதல்,
இந்த இரண்டு தண்டவாளங்களின்
நடுவே
நகர்கிறது நம் நட்பு............

உன் சிரிப்பு,சிந்தனை,
வெறுப்பு,வேதனை,
ஏன்!மௌனம் கூட
புரியப்படுதலால் தான்
நம் நட்பு
நசுங்காமல் சிரிக்கிறது,
நாள்தோறும்
இனிக்கிறது.......

நகரும் நட்பில்...
நீ
என் தவிப்பையும்
புரிந்து கொண்டிருக்க வேண்டும்..
புரிந்து கொண்டிருப்பாய்
என்ற புரிதலோடு தான்
காத்திருக்கிறது
மனம்......

ஏனெனில்
புரிந்தும் புரிந்துகொள்ளுதலுமாய்
தானே
மொட்டவிழ்ந்தது
நம்
நட்பூ