Wednesday, July 25, 2007

விட்டுக்கொடுத்தல்

'தான்' என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்வதில்லை.
உண்மை! சிறிது நகைச்சுவையாகக் கூறினால், குழம்பிய வாழ்க்கைலிருந்து தானை எடுத்துவிட்டால் அது ரச்மாகிவிடும்.
தான் என்ற எண்ணம் தலை தூக்கும் இடங்கள் தான் எத்தனை எத்தனை?
வேலை செய்யும் இடமாகட்டும், மாமியார் மருமகள் உறவிலாகட்டும்,க்ணவன் மனைவி இடத்தே ஆகட்டும்... இங்கெல்லாம் உறவு முறை கெடுவதற்கு இந்த எண்ணமே காரணம்.
நண்பர்கள் இடையே பிரிவு ஏற்படுவதும் இந்த எண்ணதினால் தான்.
இன்றிருப்போர் நாளை இருப்பதில்லை என்றிருக்க நம்முள் ஏன் இந்த தலைக்கனம்?விட்டுக்கொடுத்தால் வேதனை இல்லை.
வேதனை இல்லா வாழ்வு சோதனை ஆகாது.
விட்டு கொடுத்தலில் நாம் இழப்பது ஒன்றுமில்லை.
அடைவது தான் நிறைய .
நம் உறவை பலப்படுத்துகிறோம்,நண்பர்களை உறவாக்கிக் கொள்கிறோம்.
பகைமையை விரட்டுகிறோம்.
ஆக விட்டு கொடுத்தலில் விவேகம் உண்டு.
வாழ்க்கையை வளமாக்கும் வழியும் உண்டு.
ஒரு மாறுதலுக்காக அடுத்த முறை 'தான்' என்ற எண்ணம் தலைதூக்கும் போது சிறிது விட்டு கொடுத்து பார்க்கலாமா?
சந்தோஷக் காற்று சூழட்டும்.
நட்புடன்
தோழி பத்மா

வணக்கம்.


வணக்கம்.
தமிழில் மட்டுமே எழுத காகித ஓடம்.
கடலில் போனாலும்
கவிழாத ஓடமாய் நம் வாழ்வு விளங்க வேண்டும்
என்பதே என் பிரார்த்தனை.
இந்த இறைஞ்சலுடன்
முதலடி வைக்கும்
என் எண்ண பிதற்றலுக்கு
வண்ணம் சேர்க்கும் விதமாய்
நண்பர்களின் வருகை இருக்கும்
என நம்புகிறேன்.
வந்து வாழ்த்துங்கள்.

.......பத்மா